பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
நடிகை ஹூமா குரேஷியும், சோகைல் கானும் நெருங்கி பழகி வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. இந்த கிசுகிசுக்கள், குடும்பத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டவரான சல்மான் கானை ரொம்பவே அப்செட் செய்து விட்டதாம். இதன் காரணமாக, டிசம்பர் மாதம் பன்வல் பண்ணை வீட்டில் நடந்த சல்மான் கானின் 50வது பிறந்தநாள் விழாவிற்கு வந்த ஹூமாவிடம் சல்மான் முகம் கொடுத்துக் கூட பேசவில்லையாம். அவரிடம் இருந்து விலகியே இருந்தாராம். சல்மான், ஹூமாவை ஒதுக்கியது விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றாகவே தெரிந்ததாம். வெளி நபர்களால் தங்கள் குடும்பத்தில் விரிசல் வருவதை சல்மான் பொறுத்துக் கொள்ள விரும்பாததால் தான் இந்த கோபமாம். ஆனால் சோகைல் உடன் கிசுகிசுக்கபட்டதும் அது பற்றி ஹூமாவிடம் கேட்ட போது, சோகைல் எனக்கு பெரிய அண்ணன் போன்றவர் என கூறி அதற்கு முற்றிப்புள்ளி வைத்து விட்டார். இருந்தும் ஹூமா மீது சல்மானின் கோபம் குறையவில்லையாம்.