பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த படம் கோ. அந்த படத்தில் அவர் பத்திரிகை புகைப்பட கலைஞராக நடித்திருந்தார். அதையடுத்து இப்போது உருவாகியுள்ள கோ-2 படத்தில் நாயகனாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சேனல் நிருபராக நடித்துள்ளார். கதைப்படி, அரசியல்வாதியாக நடித்துள்ள பிரகாஷ்ராஜின் சில தில்லுமுல்லுக்களை அவர் ரகசியமாக படம் பிடித்து சேனலில் வெளியிட மிகப்பெரிய சர்ச்சையாகி விடுவதுதான் கதையாம்.
இதையடுத்து பிரகாஷ்ராஜ் அவரை டார்க்கெட் பண்ண, அடுத்தடுத்து நடக்கும் வில்லங்கம்தான் இந்த கோ-2 படமாம். ஆக, முதல்பாதியில் ஜாலியாக செல்லும் இந்த படம் பிற்பாதியில் அதிரடியாக இருக்குமாம். இன்றைய தருவாயில் துணிச்சலாக செயல்படும் ஒரு சேனல் நிருபருக்கு என்னென்ன பிரச்சினைகள் உள்ளது என்பதை சொல்லியிருக்கிறார்களாம். அதோடு, பிரகாஷ்ராஜூடன் பாபி சிம்ஹா மோதும் காட்சிகளில் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளதாம். அவருடன் நடித்த அனுபவங்களை சிலிர்ப்புடன் தனது நட்பு வட்டாரங்களில் கூறி வருகிறார் பாபிசிம்ஹா.