அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
சமீபகாலமாக ஒரு ஹீரோவை இன்னொரு ஹீரோ மனம் திறந்து பாராட்டும் ஆரோக்கியமான நிலை உருவாகியிருக்கிறது. அதோடு விஜயசேதுபதி போன்ற நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் கதாநாயகிகள் சிறப்பாக நடித்தாலும் அவர்களை பாராட்டத் தவறுவதில்லை.
அந்த வகையில், தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகள சிறப்பாக நடித்தால் அதை மேடைகளில் மனம் திறந்து பாராட்டுவதிலும் விஜயசேதுபதிக்கு நிகர் யாரும் இருக்க முடியாது. தன்னுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, மெல்லிசை படங்களில் நடித்த காயத்ரியின் நடிப்பை இப்போதுவரை புகழ்ந்துபேசி வருகிறார் விஜய சேதுபதி. முதல் படத்தில் இருந்தே காயத்ரியிடம் ரொம்ப ஜாக்கிரதையாக நடித்து வருகிறேன். நான் கொஞ்சம் அசந்தால் கூட நடிப்பால் என்னை அவர் சாப்பிட்டு விடுவார் அப்படியொரு நடிகை என்று காயத்ரியைப்பற்றி கூறி வருகிறார்.
அவரைத் தொடர்ந்து பீட்சா, சேதுபதி படங்களில் தன்னுடன் நடித்துள்ள ரம்யா நம்பீசனையும், இவர் நடிப்பதே தெரியாது. அவ்வளவு இயல்பாக நடிப்பார். அவருடன் நடிக்கும்போது நமக்கும் நடித்த டயர்டு தெரியாது. வீட்டில் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது போலவே இருக்கும். அப்படியொரு நேச்சுரலான நடிகை என்று கூறி வருபவர், இப்போது காதலும் கடந்து போகும் படத்தில் தன்னுடன் நடித்துள்ள பிரேமம் மடோனாவின் நடிப்பைப்பற்றியும் பெருமையாக பேசி வருகிறார்.
அதாவது, பிரேமம் படத்தில் அவர் அருமையாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் அதையும் தாண்டி அற்புதமாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவருடன் இணைந்து நடித்தபோது அவரது அசத்தலான பர்பாமென்ஸைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அப்படியொரு நடிப்பு ராட்சஸி. இதுபோன்ற சிறந்த நடிகைகளுடன் நடிப்பதால் படத்துக்குப்படம் என்னை நானும் மெருகேற்றிக் கொள்ள முடிகிறது என்கிறார் விஜயசேதுபதி.