டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சில வருடங்களுக்கு முன்பு பிசி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் விமல்.
சரியான படங்களை தேர்வு செய்யாததினால் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன.
இன்னொரு பக்கம், சின்ன கம்பெனி படங்களில் நடித்ததும் அவருக்கு ஆபத்தாகிவிட்டது.
விமல் நடித்த பல படங்கள் ரிலீஸ் அன்று மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க ஆரம்பித்தன.
ஜன்னலோரம் என்ற படத்தில் வேறு பல ஹீரோக்கள் இருந்தும், அப்படத்தின் ரிலீஸ் அன்று சுமார் 80 லட்சம் கொடுத்தார் விமல்.
அவர் பணம் தரவில்லை என்றால் அந்தப்படம் ரிலீஸ் ஆகாது என்ற நிலையில் பணம் கொடுத்து உதவினார். அதோடு தன் சம்பளம் 50 லட்சத்தையும் இழந்தார்.
இப்படியாக சம்பாதித்த பணத்தையும் இழந்த விமல் ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்தார்.
இப்போதைய அவரது நம்பிக்கை மாப்ள சிங்கம் மற்றும் அஞ்சல படங்கள்தான்.
மாப்ள சிங்கம் சென்சார் ஆகி அறு மாதங்களுக்கு மேலாகிறது.
பசங்க-2 படத்தை வாங்கி வெளியிட்ட கையோடு மாப்ள சிங்கம் படத்தை ரிலீஸ் செய்ய தயாரானார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்.
இதற்கிடையில் விமல் நடித்த அஞ்சல படமும் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி இருந்தது.
இம்மாதம் வெளி வந்ததிருக்க வேண்டிய மாப்ள சிங்கம், தற்போது அஞ்சல படத்துக்காக வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறது.
அஞ்சல பிப்ரவரி 19 அன்று திரைக்கு வருகிறது. இரண்டு வாரங்கள் கழித்து மாப்ள சிங்கம் வருகிறதாம்.