இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
சில வருடங்களுக்கு முன்பு பிசி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் விமல்.
சரியான படங்களை தேர்வு செய்யாததினால் அவர் நடித்த பல படங்கள் வரிசையாக தோல்வியடைந்தன.
இன்னொரு பக்கம், சின்ன கம்பெனி படங்களில் நடித்ததும் அவருக்கு ஆபத்தாகிவிட்டது.
விமல் நடித்த பல படங்கள் ரிலீஸ் அன்று மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க ஆரம்பித்தன.
ஜன்னலோரம் என்ற படத்தில் வேறு பல ஹீரோக்கள் இருந்தும், அப்படத்தின் ரிலீஸ் அன்று சுமார் 80 லட்சம் கொடுத்தார் விமல்.
அவர் பணம் தரவில்லை என்றால் அந்தப்படம் ரிலீஸ் ஆகாது என்ற நிலையில் பணம் கொடுத்து உதவினார். அதோடு தன் சம்பளம் 50 லட்சத்தையும் இழந்தார்.
இப்படியாக சம்பாதித்த பணத்தையும் இழந்த விமல் ஒருகட்டத்தில் மார்க்கெட் இழந்தார்.
இப்போதைய அவரது நம்பிக்கை மாப்ள சிங்கம் மற்றும் அஞ்சல படங்கள்தான்.
மாப்ள சிங்கம் சென்சார் ஆகி அறு மாதங்களுக்கு மேலாகிறது.
பசங்க-2 படத்தை வாங்கி வெளியிட்ட கையோடு மாப்ள சிங்கம் படத்தை ரிலீஸ் செய்ய தயாரானார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன்.
இதற்கிடையில் விமல் நடித்த அஞ்சல படமும் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி இருந்தது.
இம்மாதம் வெளி வந்ததிருக்க வேண்டிய மாப்ள சிங்கம், தற்போது அஞ்சல படத்துக்காக வழிவிட்டு ஒதுங்கியிருக்கிறது.
அஞ்சல பிப்ரவரி 19 அன்று திரைக்கு வருகிறது. இரண்டு வாரங்கள் கழித்து மாப்ள சிங்கம் வருகிறதாம்.