இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
டெம்பர், ரேஸ் குர்ராம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு திரைக்கதை எழுதிய வக்கந்தம் வம்சி நீண்ட நாட்களாக இயக்குனராக வேண்டும் என முயற்சி செய்து வருகின்றார். ஜுனியர் என்.டி.ஆருக்கு என ஒரு ஆக்ஷன் கதையை தயார் செய்து அவரிடம் கூறினார். அக்கதையைக் கேட்டு பிடித்துப் போக ஜுனியர் என்.டி.ஆரும் தனது சகோதரர் கல்யாண் ராம் தயார்ப்பில் அப்படத்தில் நடிப்பதாக வம்சியிடம் கூறியுள்ளார். ஆனால் இது வரை படப்பிடிப்பை துவங்குவது குறித்து வம்சியிடம் ஜுனியர் என்.டி.ஆர் எதுவும் கூறவில்லையாம்.
நானாகு பிரேமதோ படத்திற்கு பின்னர் தனது படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பார் என வம்சி எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கொரடலா சிவா இயக்கத்தில் ஜனதா கேரச் படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் கல்யாண் ராம் தயாரிக்கவுள்ள படத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாக கடந்த மூன்று வருடமாக வம்சி படத்தில் நடிக்காமல் ஜுனியர் என்.டி.ஆர் காலம் கடத்தி வருகின்றாராம்.