ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
ஓ காதல் கண்மணி படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கார்த்தி, பிரேமம் புகழ் சாய் பல்லவி இருவரும் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக திரைத்துறையில் தகவல் அடிபடுகிறது. ஓ காதல் கண்மணி படத்தின் வெற்றிக்குப் பிறகு கூடுதல் கவனத்துடன் அடுத்த படத்திற்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் மணிரத்னம்.
கார்த்தி, துல்கர் சல்மான் இருவரும் இணைந்து நடிக்க டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் புதிய படத்தை மணிரத்னம் தொடங்க திட்டமிட்டு இருந்தார். அந்தக்கதையைக் கேட்டுவிட்டு கார்த்தி, துல்கர் இருவரும் நடிக்கத் தயாராக இருந்தனர். ஆனால் இருவரது தேதிகளும் சரியாக அமையவில்லை. எனவே அந்தப்படத்தை இயக்கும் எண்ணத்தையே ஒத்தி வைத்தார் மணிரத்னம்.
அதன் பிறகு கார்த்தி மட்டும் ஸோலோ ஹீரோவாக நடிக்கும் கதையை எழுத ஆரம்பித்தார். தற்போது கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கான கதையை எழுதி முடித்துவிட்டார் மணிரத்னம். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் துவங்கவிருப்பதாக தகவல் அடிபடுகிறது.
நாகார்ஜுனா உடன் நடிக்கும் தெலுங்குப் (தமிழில் தோழா) படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து, தற்போது காஷ்மோரா படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. அப்படத்தை முடித்துவிட்டு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார்.
இந்தப்படத்தை வழக்கம்போல் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. பிரேமம் மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல். கார்த்தி, சாய் பல்லவி உடன் மற்ற பாத்திரங்களின் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.