சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
பிப்ரவரி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று 'விசாரணை, பெங்களூர் நாட்கள், சாகசம், சேது பூமி, நாளை முதல் குடிக்க மாட்டேன், இரண்டு மனம் வேண்டும்' ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆறு படங்கள் வெளிவந்தாலும் 'பெங்களூர் நாட்கள், விசாரணை' ஆகிய படங்களுக்கு இடையேதான் உண்மையான போட்டி.
வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படத்தை ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பாராட்டியதை வைத்து விளம்பரப்படுத்தி வருகிறார்கள். அது படத்திற்கு எந்த அளவிற்கு பயன்படும் என்பது இனிமேல்தான் தெரிய வரும். இருந்தாலும் மல்டிபிளக்ஸ்களில் மட்டும் இந்தப் படம் ஓடும் என்று சொல்கிறார்கள். இடைவேளைக்குப் பின் படம் இழுவையாக உள்ளது என்பது பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது.
'பெங்களூர் நாட்கள்' படம் மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற படம் என்பதால் இங்கும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், படத்தில் எந்த விதமான 'ட்விஸ்ட் அன்ட் டேர்ன்' திரைக்கதையில் இல்லாதது படத்திற்கு பெரிய மைனஸ் பாயின்டாக உள்ளது. தமிழ்ப் படம்தான் என்றாலும் படத்தில் ஒரு அன்னியத்தனம் இருப்பது ரசிப்பதற்குத் தடையாக உள்ளது. இருந்தாலும் படம் ரசிக்கும்படியாக உள்ளது. படத்தின் நீளத்தைக் குறைத்தால் பி அன்ட் சி சென்டர்களிலும் படம் ஓடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்கிறார்கள்.
பிரசாந்த் நடித்து வெளிவந்துள்ள 'சாகசம்' திரைப்படம் 90களில் வந்த படத்தின் கதையைப் போல உள்ளது. தன் சக காலத்திய நடிகர்களான அஜித், விஜய் இன்னமும் கலக்கிக் கொண்டிருக்க, அவர்களுக்கு முன்னதாகவே திரையுலகில் அறிமுகமான பிரசாந்த் பல திறமைகள் இருந்தும் இன்னமும் தடுமாறிக் கொண்டுதானிருக்கிறார்.
மொத்தத்தில் பிப்ரவரி 5ல் வெளிவந்த படங்கள் இந்த வார வசூலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே சொல்கிறார்கள்.