'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் அரசியல்வாதியாக நடித்தவர் மைம் கோபி. அதையடுத்து கதகளி உள்பட சில படங்களில் நடித்தவர் இப்போது கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் சில படங்களிலும் வில்லனாக நடித்து வருகிறார் மைம் கோபி.
இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் ஒரு நடிகனாக வேண்டும் என்பதுதான் முன்பு எனது நோக்கமாக இருந்தது. அதனால் எந்த வேடம் கிடைத்தாலும் நடிக்க வேண்டும் என்பதில்தான் ஆர்வமாக இருந்தேன். ஆனால், நானே எதிர் பார்க்காத வகையில் மெட்ராஸ் படத்தில் பேசப்படும் ஒரு வேடத்தை கொடுத்தார் டைரக்டர் ரஞ்சித். அவரே இப்போது கபாலி படத்தில் வில்லனாக்கியிருக்கிறார். அதுவும் ரஜினி சாருடன் நடிக்கும் வாய்ப்பு.
இத்தனை சீக்கிரத்தில் ரஜினி சாருடன் நடிப்பேன் என்று நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. அப்படியொரு வாய்ப்பை டைரக்டர் ரஞ்சித் எனக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக, ரஜினி சாருடன் சண்டை காட்சியில் நடித்திருக்கிறேன். இதைவிட பெருமை என்ன வேண்டும். அதனால் கபாலி படத்திற்கு பிறகு எனக்கு இன்னும் அதிரடியான வில்லன் வேடங்கள் கிடைக்கும் என்பது உறுதியாகி விட்டது. அதனால், இந்த 2016ம் ஆண்டில் தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர் நான்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார் மைம் கோபி.