தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாய்ஸ் நாயகனான சித்தார்த் இப்போது வரை சாக்லேட் ஹீரோவாகத்தான் கருதப்பட்டு வருகிறார். சினிமாவில் தான் நடிக்க வந்த 12 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், ஜிகர்தண்டா படத்தில்தான் அந்த இமேஜை உடைத்தெறிந்து விட்டு ஆக்சன் நாயகனாக வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. விளைவு இப்போது வரை அவர் ரொமான்டிக் நாயகனாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரை நம்பி ஆக்சன் கதைகளை படமாக்க டைரக்டர்களும் முன்வர தயங்கி நிற்கிறார்கள்.
அதனால், அடுத்தகட்ட முயற்சியாக தற்போது காமெடி கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் சித்தார்த். அதன்காரணமாக ஜில் ஜங் ஜக் என்ற படத்தில் காமெடி கதையில் நடித்துள்ளார். மேலும், சித்தார்த் படங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கதாநாயகிகள் இடம்பெற்று வந்தநிலையில், முதன்முறையாக இந்த படத்தில் கதாநாயகியே இல்லை. அதனால் ஒரு நடிகை மீதான கோபம் காரணமாகத்தான் அவர் இந்த படத்தில் ஹீரோயினே இல்லாத கதையில் நடிப்பதாக செய்தி பரவியிருக்கிறது.
ஆனால் இதுபற்றி சித்தார்த்தைக் கேட்டால், எந்த நடிகை மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் கோபமில்லை. இந்த படத்தில் கதாநாயகிக்கு வேலை இல்லை. ஜில், ஜங், ஜக் என்ற மூன்று பேர் சம்பந்தப்பட்ட கதை இது. அதோடு கதாநாயகி இல்லாத குறையும் இந்த கதையில் இருக்காது. அந்த அளவுக்கு புதுமையான காமெடி கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது என்று கூறும் சித்தார்த், இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து காமெடி கதைகளில் அதிகமாக நடிக்கயிருப்பதாகவும் கூறுகிறார்.