அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விக்ரம் நடிக்கும் இருமுகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், புலி படத்தை தயாரித்த சிபு தமீன்ஸ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் மலேசியாவில் நடந்து வந்தது. நேற்று இந்தியா திரும்ப மலேசியா வந்த நயன்தாராவின் உதவியாளர்களிடம் ஒர்க்கிங் பெர்மிட் உள்ளிட்ட சரியான டாக்குமெண்டுகள் இல்லாததால் மலேசிய குடியுரிமை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்தது.
இதனை படக்குழு மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: மலேஷியாவின் இரண்டு பன்னாட்டு விமான முனையங்களில் பணி அனுமதி விதிமுறைகள் வேறுபட்டவை. வழக்கமாக இந்தியாவுக்கு செல்லும் பயணிகள் “கே.எல்.1” முனையம் மூலம் பயணிப்பர். ஆனால் புதிய விமான சேவை நிறுவனமான மலிண்டோ “கே.எல்.2” முனையம் மூலம் இயங்குகிறது. அம்முனையத்தில் குடியேற்ற அதிகாரிகள், நயன்தாராவின் உதவியாளர்களிடம் அவர்களுக்கான பணி அனுமதி மற்றும் அதன் விசா முத்திரைப்பதிவுக்கான சில விளக்கங்களை கேட்டுள்ளனர். பிற்பாடு நயன்தாராவே அதிகாரிகளிடம் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டதோடு, அவரும், அவரது உதவியாளர்களும் இந்தியாவுக்கு எவ்வித இடையூறுமில்லாமல் திரும்ப ஏற்பாடு செய்தார். இதுதான் நடந்தது. என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நயன்தாராவின் பாஸ்போர்ட் படங்கள் நேற்று வாட்அப்பில் வெளிவந்தது. இதுகுறித்து படக்குழுவினர் கோலாலம்பூர் விமான நிலைய போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விமான நிலைய ஊழியர் ஒருவரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.