பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ரன்பீர் கபூரும் ஒருவர். இவர் தற்போது ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இதுதவிர 'ஏய் தில் ஹே முஷ்கில்' படத்திலும் நடிக்கிறார். இப்படத்தில் முதன்முறையாக ஐஸ்வர்யா ராய் உடன் ரன்பீர் நடிக்கிறார். ஐஸ்வர்யா ராய் உடன் நடிப்பது தான் ரன்பீரின் கனவாம். அது இப்போது நிறைவேறியுள்ளது என்கிறார் ரன்பீர்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... என் அப்பாவின் ஆ ஆப் லாட் சலேன் படத்தில் உதவியாளராக இருந்தேன். அப்போது தான் ஐஸ்வர்யா ராயை பார்த்தேன். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் என் கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறியுள்ளது. அவருடன் நடிப்பது எனக்கு பெருமை. படப்பிடிப்பில் ஒரு நண்பர் போல என்னுடன் பழகினார் என்று ரன்பீர் கூறியுள்ளார்.