ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
முன்னணி தெலுங்குப்பட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'பாகுபலி'. தமிழ் - தெலுங்கு என ஒரே நேரத்தில் உருவான 'பாகுபலி' படம் ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் என பல மொழிகளில் டப் செய்யப்பட்டது. வெளியான அனைத்து மொழிகளிலும் வெற்றியடைந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் மிகப்பெரிய தொகையை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
கடந்த சில மாதங்களாக பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. என்றாலும், 'பாகுபலி 2' ஆம் பாகம் தாமதமாவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இது பற்றி ராஜமௌலியிடம் கேட்டால், “படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடந்து வருகிறது. 2-ஆம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. கடந்த படப்பிடிப்பை திட்டமிட்டதற்கு முன்னதாகவே முடித்துள்ளோம்.” என்று கூறியுள்ள ராஜமௌலி, "இந்தப் படத்தின் 3-ஆம் பாகமும் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 'பாகுபலி'யின் கதை பெரியது. எனவே அது தொடரும்." என்றும் தெரிவித்துள்ளார்.
2-ஆம் பாகத்துக்கு முடிவு (Baahubali: The Conclusion) எனப் பெயர் வைத்தநிலையில் தற்போது 3 ஆம் பாகமும் இருப்பதாக சொல்வதால் பாகுபலி படத்தின் டேக்லைன் மாற வாய்ப்புள்ளதாகவே தோன்றுகிறது.