'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ரேணிகுண்டா', 'எத்தன்' புகழ் சனுஷாவிடம் உள்ள நல்ல பழக்கம் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைத்த வாய்ப்புகளை ஏற்று அதில் சிறப்பாக நடிப்பது தான். அதனால் தான் 20 வயதிலேயே ஒரு சிறுவனுக்கு அம்மாவாக நடிக்க கூட தயக்கமில்லாமல் நடித்து அதற்காக பாராட்டுக்களையும் சில விருதுகளையும் பெற்றவர்.
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'மிலி' மற்றும் 'நிர்நாயகம்' ஆகிய இரண்டு படங்களிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்த சனுஷாவுக்கு இப்போது மீண்டும் கதாநாயகியாக இளம் நடிகர் உன்னி முகுந்தனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது. இதில் கிராமத்திலிருந்து டவுனிற்கு கல்லூரி சென்று வரும் மாணவியாக, இளைஞர்களின் கிராமத்து குயிலாக நடிக்கிறார் சனுஷா இன்னொரு கதாநாயகியாக 'பிசாசு' புகழ் பிரயாகாவும் நடிக்கிறார்..
படத்தின் டைட்டில் என்ன தெரியுமா..? 'ஒருமுறை வந்து பார்த்தாயா' என்பதுதான். இருபது வருடங்களுக்கு முன் பாசில் இயக்கத்தில் வெளியான 'மணிச்சித்திரதாழு' படத்தில் க்ளைமாக்ஸில் தனது காதலனை பார்த்து கேள்வி கேட்டு ஷோபனா பாடும் 'ஒருமுறை வந்து பார்த்தாயா' என்கிற சூப்பர்ஹிட் பாடலில் இருந்துதான் அது எடுக்கப்பட்டுள்ளது.
மலையாள படங்களின் டைட்டில்களில் மலையாளம், ஆங்கிலம் பெரும்பங்கு வகித்தாலும் தமிழ் டைட்டிலுக்கும் முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக டைட்டிலுக்காக சினிமா பாடல் வரிகளை பயன்படுத்துவது என்பது அரிதான விஷயம்.. ஆனால் தற்போது மலையாள படம் ஒன்றுக்கு இடம்பெற்ற 'ஒருமுறை வந்து பார்த்தாயா' என தமிழ் பாடல் வரியை தலைப்பாக வைத்திருப்பது ஆச்சர்யம் தான்.