இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாகுபலி எனும் பிரமாண்ட வரலாற்று திரைப்படத்தை எடுத்து இந்திய அளவில் பரிச்சையமான இயக்குனராக மாறிவிட்ட ராஜமௌலி தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகமான பாகுபலி : தி கன்க்லூசன் படத்தின் கேரள படப்பிடிப்பில் படு பிசியாகவுள்ளார். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த விலங்குகள் பாதுகாப்பு ஆர்வலர்கள் ராஜமௌலி மற்றும் பாகுபலி 2 தயாரிப்பாளரை கைது செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கேரளாவில் உள்ள திரிச்சூரில் பாகுபலி 2 படப்பிடிப்பு நடைபெற்ற போது காளிதாஸ் எனும் யானை இந்திய வனவிலங்குகள் நலத்துறையிடமிருந்து எவ்வித முன் அனுமதியும் இன்றி படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக யானையை படப்பிடிப்பு தளத்தில் நிற்க வைத்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் குழுமி இருந்த அப்படப்பிடிப்பு தளத்தில் அதிக ஒலி எழுப்பி யானையை துன்புறுத்தியதாகவும், இதற்கு காரணமான இயக்குனர் ராஜமௌலி, அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரை கைது செய்ய வேண்டும் எனவும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து ராஜமௌலி உள்ளிட பாகுபலி படக்குழுவினருக்கு விளக்கம் கேட்டு கடிதம் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. படக்குழு யானையை பயன்படுத்த முன் அனுமதி எதுவும் பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால் ராஜமௌலி கைதாகவும் வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.