பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது தனது எதிரில் யார் தென்பட்டாலும் வணக்கம் சொல்லும் பழக்கமுள்ளவர் அஜீத். அதேமாதிரி மாலையில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் வெளியேறுவார். அவுட்டோர் படப்பிடிப்பில் இருக்கும்போது தன்னை சந்திக்க ஆவலுடன் வரும் ரசிகர்களுக்கென்று நேரம் ஒதுக்கி சந்திக்கிறாராம் அஜீத்.
மேலும், வேதாளம் படப்பிடிப்பில் இருந்தபோது ஒருநாள், படப்பிடிப்பை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு சுவற்றின் மேல் அமர்ந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், கீழே தவறி விழுந்து விட அவனது கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாம். அதைப்பார்த்த அஜீத், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது காரிலேயே அந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தாராம். பின்னர் அந்த சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தபோது மருத்துவ செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து அனுப்பினாராம் அஜீத்.