ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காதல் படத்தில் பிரபலமானவர் சுகுமார். ஊரைவிட்டு சென்னைக்கு ஓடிவரும் பரத், சந்தியாவுக்கு சென்னையில் அடைக்கலம் கொடுக்கும் கேரக்டர். அதன் பிறகு பல படங்களில் காமெடியனாக நடித்தவர் இப்போது படம் இயக்குகிறார். தற்போது அவர் சும்மாவே ஆடுவோம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் அருண் பாலாஜி, லீமா பாபு ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். டி.என்.ஏ.ஆனந்த் தயாரிக்கிறார்.
படத்தை பற்றி காதல் சுகுமார் கூறியதாவது: தாரை தப்பட்டை படம் கரகாட்டம் பற்றி வந்தது. இது கூத்துக்கலை பற்றிய படம். ஒரு காலத்தில் மக்களை மகிழ்வித்த கூத்து கலைஞர்கள் இப்போது நலிந்த வாழ்க்கை வாழ்கிறார்கள். வேறு தொழில் தெரியாத கூத்துக்கலைஞர்களின் இன்றைய வாழ்க்கையை காட்டும் படம்.
கூத்து கலைஞர்களுக்காக அந்தக் காலத்தில் ஜமீன் ஒருவர், வீட்டுமனை தானமாக வழங்குகிறார். காலப்போக்கில் அவர்களை ஏமாற்றி பலரும் அதனை பறித்துக்கொள்கிறார்கள். அதனை இந்த தலைமுறை எப்படி மீட்கிறது என்பது கதை. ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. என்கிறார் காதல் சுகுமார்.