பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட்டில் உள்ள ஆக்ஷ்ன் ஹீரோக்களில் முக்கியமானவர் சன்னி தியோல். ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு தனது 'கயால்' படத்தின் இரண்டாம் பாகமாக ''கயால் ஒன்ஸ் அகைன்'' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியாகியுள்ளார். நடிகராக மட்டுமல்லாது இப்படத்தின் இயக்குநராகவும் களமிறங்கியுள்ளார் சன்னி தியோல். இப்படம் பற்றியும், இதில் கிடைத்த அனுபவம் பற்றி நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...
* ஏன் இரண்டாம் பாகத்தை கையில் எடுத்தீர்கள்.?
கயால் ஒன்ஸ் அகைன் படத்தின் கதை மிகவும் அருமையாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அதை படமாக எடுக்க தயாரிப்பாளர் தான் கிடைக்கவில்லை. இதனையடுத்து நானே அந்தப்படத்தின் தயாரிப்பாளராக மாறியதோடு இயக்குநராகவும் களமிறங்கினேன். நான் தான் இப்படத்திற்கு கதை எழுதி உள்ளேன். 25 வருடம் கழித்து ஒரு படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது. தற்போது இரண்டாம் பாகம் தொடர்பான படங்கள் அதிகம் வருவதால் நான் இதை கையில் எடுத்தேன்.
* கயால் ஒன்ஸ் அகைன் படம் பற்றி சொல்லுங்க.?
கயால் படத்தின் கதை எங்கு முடிந்ததோ, அதிலிருந்து தொடர்வது தான் கயால் ஒன்ஸ் அகைன் படத்தின் கதை. இன்றைக்கு டெக்னாலஜி, சமூகம் எல்லாம் மாறிவிட்டது. இன்றைய இளஞர்கள் மிகவும் வலிமையானவர்கள். இவை எல்லாவற்றையும் இப்படத்தில் சேர்த்துள்ளேன். இப்படம் பற்றி ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் படம் த்ரில்லர் ப்ளஸ் யதார்த்த படமாக இருக்கும். ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும்.
* இப்படத்தில் ஆக்ஷ்ன் எந்தளவுக்கு உள்ளது, எப்படி அதை படமாக்கினீர்கள்.?
இன்றைக்கு ஹீரோ மட்டுமல்ல சராசரி மனிதன் கூட ஆக்ஷ்ன் செய்ய விரும்புவான். ஆகையால் இந்தப்படத்தில் நிறைய வித்தியாசமான ஆக்ஷ்ன் காட்சிகள் வைத்துள்ளோம். ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்ட் டேன் பிராட்லியை இப்படத்திற்கு பயன்படுத்தியுள்ளோம். அன்றைய காலக்கட்டத்தை விட இன்றைக்கு நிறைய டெக்னாலஜி வளர்ந்துள்ளதால் அவரை பயன்படுத்தியுள்ளோம். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது எந்த ஒரு சின்ன விபத்து கூட ஏற்படாமல் மிகவும் கவனமாக படமாக்கினோம்.
* நடிப்பு, இயக்கம் எது கஷ்டம்.?
இரண்டையும் ஒரேநேரத்தில் கையாள்வது சிரமமான ஒன்று தான். ஆனால் நான் இரண்டையும் செய்ய வேண்டிய சூழல், ஆகையால் இரண்டையும் செய்தேன். என்னை பொறுத்தவரை நடிப்பு, இயக்கம் இரண்டில் நடிப்பு தான் சுலபமாக உள்ளது. இயக்குநராக பணியாற்றும் போது நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும். ஆனால் நடிப்புக்கு அப்படி தேவையில்லை. ஆகவே நடிப்பு தான் சுலபமானது.
* பாலிவுட்டில் உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை சொல்லுங்க.?
இன்றைக்கு நடிகர்கள் இடையே ஒற்றுமை இல்லை, இதை கண்டிப்பாக நான் சொல்லியே ஆக வேண்டும். இன்றைக்கு எல்லோரும் போட்டியாகத்தான் கருதுகிறார்கள். யாரையாவது காயப்படுத்திவிட்டு அவர்கள் முன்னேறி செல்ல வேண்டும் தான் நினைக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஒரு பாதுகாப்பு அற்ற சூழலில் தான் உள்ளார்கள். அது ஏன்.? என்று இதுநாள் வரை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இவ்வாறு சன்னி தியோல் கூறினார்.