புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
தமிழ்சினிமாவை நம்பி கோடிக்கணக்கான பணத்துடன் வந்த பல கார்ப்பரேட் கம்பெனிகள், இங்கே கசப்பான அனுபவங்களை சந்தித்ததால் ஒன்றிரண்டு படங்களோடு நடையைக்கட்டிவிட்டன. தற்போது ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகள் மட்டுமே தமிழில் படங்கள் தயாரித்து வருகின்றன.
இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த லைகா மொபைல் நிறுவனம், கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்தது. இந்நிலையில் தற்போது எந்திரன் - 2 ஆம் பாகத்தை 2.0 என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 300 கோடி.
இந்நிலையில் கமல்ஹாசனின் கனவுப்படமான 'மருதநாயகம்' படத்தையும் லைகா தயாரிக்க உள்ளது. 1997 ஆம் வருடம் 100 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டு, 20 சதவிகித படப்பிடிப்புகள் மட்டுமே முடிந்த நிலையில் அப்படம் பட்ஜெட் காரணமாக அப்போதே கைவிடப்பட்டது. இடையில் கமல் எவ்வளவோ முயற்சித்தும் 'மருதநாயகம்' படத்தை மீண்டும் தொடங்க முடியவில்லை.
இந்நிலையில் 'கத்தி' படம் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கிய தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழிந்தநிலையில் தற்போது 'மருதநாயகம்' படத்தை எடுப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளது.
தற்போது ரஜினி, ஷங்கரின் 'எந்திரன்' 2ஆம் பாகத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துவரும் இந்நிறுவனம் 'மருதநாயகம்' படத்திற்கும் சுமார் 200 கோடிக்கும் மேலான தொகையை ஒதுக்கி உள்ளதாம். இதன் மூலம் சுமார் 600 கோடியை தமிழ்சினிமாவில் தைரியமாக முதலீடு செய்துள்ளது லைகா.