தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகமான பரத், சுமார் 25 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். அவற்றில் காதல், வெயில் போன்ற வெகு சில படங்கள் மட்டுமே பரத்தின் திறமையை வெளிச்சம்போட்டுக்காட்டின. பல படங்களில் சராசரியான கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். அதனாலோ என்னவோ ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்தார் பரத்.
தற்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள பரத், இம்முறை சாக்லேட்பாய் எனும் தன்னுடைய இமேஜை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம். அதனாலேயே பொட்டு படத்தில் படு பயங்கரமான மந்திரவாதி கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டாராம். அதுமட்டுமல்ல, இயக்குனரும், நடிகை தேவயானியின் கணவருமான ராஜகுமாரனை ஹீரோவாக வைத்து ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்கவும் ஒப்புக்கொண்டாராம் பரத்.
விஜய்மில்டன் இயக்கும் படத்தில் பரத் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதற்கு இன்னொரு காரணம்... விஜய்மில்டன் உடனான அவரது நட்பு. விஜய்மில்டன் முதன் முதலாக இயக்கிய படம் 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'. இந்த படத்தில் கதாநாயகனாக பரத் நடித்தார். அப்போது இயக்குநர் விஜய் மில்டனுடன் ஏற்பட்ட நட்பு இப்போதுவரை தொடர்கிறது. எனவேதான் வில்லன் வேடத்தில் நடிக்க யெஸ் சொன்னாராம் பரத்.