டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நயன்தாரா ரசிகர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும் இணக்கமாக இருக்க மாட்டார் என்ற ஒரு குற்றச்சாட்டு நிறையவே உண்டு. நடிக்க வந்த புதிதில் அனைவருடனும் நட்பாகப் பழகியவர்தான் நயன்தாரா. தொடர்ச்சியாக வந்த நயன்தாரா பற்றிய காதல் வதந்திகளால் அவர் தனக்குத் தானே ஒரு வட்டத்தைப் போட்டுக் கொண்டார். அதன் பின் யாருடனும் அவர் தொடர்பு எல்லைக்குள் வருவது கூடக் கிடையாது. அவர் நடிக்கும் படங்களின் பிரமோஷனுக்குக் கூட வருவதில்லை. யார் என்ன சொன்னாலும் எதையும் கேட்காமல் அவர் முடிவில் மாறாமலே இருந்தார்.
அவர், பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுத்தும், பத்திரிகையாளர்களைச் சந்தித்தும் நீண்ட வருடங்களாகிவிட்டது. தற்போது விக்ரம் ஜோடியாக முதன் முறையாக நடிக்கும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பில் மலேசியாவில் இருக்கிறார் நயன்தாரா. அங்கு அவரைத் தேடி வரும் ரசிகர்களையும் பார்த்து வருகிறாராம். அது மட்டுமல்லாமல் அவர்கள் புகைப்படங்களை எடுக்கக் கேட்டாலும் மகிழ்ச்சியாக சம்மதிக்கவும் செய்கிறாராம்.
நயன்தாராவின் இந்த திடீர் மாற்றம் படக் குழுவினரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளதாம். இதனிடையே, நயன்தாராவை கடுப்பேற்றும் ஒரு விஷயமாமக 'இது நம்ம ஆளு' படத்திற்காக சிம்பு, ஆன்ட்ரியா இடம் பெற உள்ள ஒரு பாடலை விரைவில் படமாக்க உள்ளார்களாம். நியாயமாக அந்தப் பாடலில் நயன்தாரா தான் நடிக்க வேண்டியது என்கிறார்கள். நயன்தாராவின் அடுத்த வெளியீடாக 'திருநாள், இது நம்ம ஆளு' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.