'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த வருடம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படம் வெளியானது. தமிழில் முதல் படத்தில் தடுமாறிய துல்கரை நிலைநிறுத்தவும், சில சரிவுகளில் இருந்து மணிரத்னம் மீண்டு(ம்) வரவும் இந்தப்படம் ரொம்பவே உதவியது. குறிப்பாக இளைஞர்களை இந்தப்படம் ரொம்பவே கவர்ந்தது. தற்போது இந்தியிலும் இந்தப்படம் ரீமேக்காக இருக்கிறது. இதில் துல்கர் கதாபாத்திரத்தில் ஆதித்ய ராய் கபூரும் நித்யா மேனன் கேரக்டரில் ஷ்ரதா கபூரும் நடிக்க இருக்கிறார்கள்..
பொதுவாக ரீமேக் படங்களில் நடிக்கும் பல ஹீரோக்கள் அதன் ஒரிஜினலை பார்க்கவே மாட்டார்கள்.. இன்னும் சிலரோ அதை ஒரு தடவைக்கு பலதடவை பார்த்து, ஒரிஜினலில் இருந்து தங்களை டோட்டலாக மாற்றிக்கொள்வார்கள்.. ஆதித்ய ராய் கபூர் எப்படியோ தெரியாது, ஆனால் 'ஒகே கண்மணி'யை பார்த்த அவர், துல்கரின் நடிப்பை கண்டு மிரண்டுபோய் விட்டாராம். படம் பார்த்துவிட்டு, “துல்கர், நித்யா இருவரும் அவர்களது 'தி பெஸ்ட்'டை தந்துள்ளார்கள் எனக்கு இன்னும் பொறுப்பு கூடியுள்ளது.. ஆனால் எங்கள் கையில் தான் பக்காவான புளூ பிரிண்ட்டே இருக்கிறதே” என்று சொன்னதுடன் துல்கர் சல்மானை நேரில் சந்திக்கும் தனது ஆவலையும் வெளிப்படுத்தியுள்ளாராம்.