'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய், சமந்தா நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 'கத்தி' படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் துறையில் இறங்கிய நிறுவனம் லைக்கா புரொடக்ஷன்ஸ். இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் முன்னாள் அதிபரான ராஜபக்சேவுடன் இணைந்து செயல்பட்டதாக 'கத்தி' படம் வெளியான போது தமிழ் அமைப்புகள் இந்த நிறுவனத்திற்கு எதிராக போராட ஆரம்பித்தன. அதன் பின் ஒரு வழியாக சமசரம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த நிறுவனம் தமிழ்த் திரைப்படத் துறையில் காலூன்ற ஆரம்பித்தது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க சுமார் 350 கோடி ரூபாய் செலவில் '2.0' படத்தைத் தயாரித்து வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', விஜய் ஆண்டனி நடிக்க 'எமன்' ஆகிய படங்களையும் இந்நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் தயாரிக்க உள்ள மற்றுமொரு புதிய படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் கமல் ஜோடியாக ரம்யாகிருஷ்ணன் நடிக்க அவர்களின் மகளாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். ஏப்ரல் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா தான் இப்படத்தை இயக்க உள்ளார்.
லைக்கா நிறுவனத்தின் அதிபரான சுபாஷ்கரன், கமல்ஹாசனை 'மருதநாயகம்' படத்தைத் தயாரிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளாராம். அப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் நிறைய இருப்பதால் அதற்கான கால அவகாசத்தை கமல்ஹாசன் கேட்டுள்ளாராம். அனேகமாக, லைக்கா தயாரிப்பில் 'மருதநாயகம்' படம் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கலாம்.