கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
சினிமாவில் எந்த அளவுக்கு நடிக்கிறார்கள் என்பதை விட எத்தனை ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அதை வைத்துதான் அவர்களது மார்க்கெட் உயரும், சம்பளமும் உயரும். ஒவ்வொரு வெற்றிப்படத்துக்கு பிறகும் சம்பளத்தை உயர்த்திக்கொண்டேயிருப்பார்கள் நடிகர் நடிகைகள். அந்த வகையில், முன்பெல்லாம் கோடிகள் என்பது பெரிய விசயமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு சில ஹிட் படங்களில் நடித்தவர்களே பல கோடிகள் சம்பளம் கேட்கிற நிலை உருவாகியிருக்கிறது.
அந்த வகையில், நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, திரிஷா, காஜல்அகர்வால், சமந்தா போன்ற நடிகைகள் கோடிகளை கடந்து நிற்கிறார்கள். அதனால் ஓரிரு ஹிட் கொடுத்த நடிகைகளுக்கும் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டு வருகிறது. அதன்காரணமாக, ரஜினிமுரு கன் படத்திற்கு முன்பு வரை பத்து லட்சத்திற்குள் சம்பளம் வாங்கி வந்த கீர்த்தி சுரேஷ், அந்த படம் மட்டுமின்றி, தெலுங்கில் நடித்த நேனு சைலஜா படமும் ஹிட்டடித்தால் கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி 50 லட்சமாக்கி விட்டதாக கோலிவுட்டில பரபரப்பு செய்திகள் உலவிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இதுபற்றி கீர்த்தி சுரேஷ்தரப்பில் விசாரித்தால், தடாலடியாக மறுக்கிறார்கள். தமிழ், தெலுங்கில் தலா ஒரு ஹிட் படம்தான் வெளியாகியிருக்கிறது. இதை வைத்தெல்லாம் 50 லட்சம் கேட்டால் யாரும் தரமாட்டார்கள். புதிய படவாய்ப்பு கள் கீர்த்திக்கு வரக்கூடாது என்பதற்காக யாரோ இப்படியொரு வதந்தியை பரப்பி விட்டுள்ளனர் என்கிறார்கள்.