சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
கடும் மழையினால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தபோது, அண்ணா நகரில் தனது வீடு இருக்கும் ஏரியாவில் வெளியில் வந்து அந்த ஏரியாவிலுள்ள ஏழை மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி ரியல் ஹீரோ ஆனவர் சித்தார்த். அந்த உதவியை இப்போதுவரை அவர் தொடர்ந்து வருகிறார். அதற்கென ஒரு டீம் உருவாக்கியுள்ள சித்தார்த்தின் நிவாரண உதவி இப்போது கடலூரிலும் நடந்து கொண்டிருக்கிறதாம். இதை அவர் வெளியில் சொல்லி பப்ளிசிட்டி தேடாமல் சத்தமில்லாமல் செய்து வருகிறார்.
மேலும், சித்தார்த்தின் இந்த செயலை பாராட்டி கெளரவப்படுத்தும் விதமாக 2015ம் ஆண்டுக்கான என்டிடிவி இந்தியன் விருது சித்தார்த்துக்கு கிடைத்துள்ளது. அவரது சமூக நோக்கத்தை பெருமைப்படுத்தும் வகையில் இந்த விருது அளிக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவலை தனது ட்விட்டரில் வெளியிட்டி ருக்கிறார் சித்தார்த்.