ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெளனகுரு, கலகலப்பு, மதயானைக்கூட்டம், தெகிடி, முண்டாசுப்பட்டி உள்பட பல படங்களில் காமெடியனாக நடித்தவர் காளி வெங்கட். அவர் தற்போது திரைக்கு வந்துள்ள இறுதிச்சுற்று படத்தில் ஹீரோயின் ரித்திகா சிங்கின் அப்பாவாக நடித்துள்ளார். இந்த படத்தின் இந்திப்பதிப்பில் நடித்தபோது இந்தி வசனங்களை தமிழில் எழுதி வைத்து பேசியவர், சில உச்சரிப்புகளை மாற்றி பேசியதால் அது கெட்டவார்த்தையாகி விட்டதாம்.
இதுபற்றி காளி வெங்கட் கூறுகையில், இறுதிச்சுற்று படத்தில் என்னை ரித்திகாவின் அப்பாவாக நடிக்க கேட்டபோது, யூத்தாக இருக்கிறீர்கள். அப்பா வேடம் நடிக்க விருப்பமா என்று டைரக்டர் சுதா தயக்கத்துடன் கேட்டார். அதற்கு, எந்த கேரக்டராக இருந்தாலும் நான் நடிக்கிறேன் என்று சொல்லி நடித்தேன். பொறுப்பில்லாத குடிகார அப்பாவாக நடித்தேன். மேலும், இந்த படத்தின் இந்தி பதிப்பில் நடித்தபோது இந்தி வசனங்களை தமிழில் எழுதி வைத்து பேசினேன். அப்போது ஒரு வார்த்தையை நான் தவறாக உச்சரித்து விட்டேன். அதைக்கேட்டு யூனிட்டே சத்தமாக சிரித்தது. அப்போது நான் மாதவன் சாரை பார்த்தேன். அவர், யோவ் நீ கெட்ட வார்த்தை பேசிட்டேய்யா என்றார். அதன்பிறகு அவர் சொன்னபடி பேசி நடித்தேன்.
அதோடு, முதலில் பொறுப்பில்லாத குடிகார அப்பாவாக நடித்தபோதும், போகப்போக என் கேரக்டர் பொறுப்பாகி விடும். அந்த வகையில், க்ளைமாக்ஸ் காட்சியில் என் மகள் பாக்சிங்கில் ஜெயித்ததைப்பார்த்து, சந்தோசத்தில் அழுவேன். அந்த காட்சியில் நான் நடித்தபோது சத்தமாக அழுது நடித்ததைப் பார்த்து டோட்டல் யூனிட்டே ஸ்தம்பித்து நின்று விட்டது. பத்து நிமிசம் செட்டில் எந்த சத்தமுமே இல்லை. அந்த அளவுக்கு அந்த எமோஷனலான காட்சியில் என்னால் கண்ட்ரோல் பண்ண முடியாமல் அழுதேன். தன்னை மறந்து நடித்தேன். வெளியில் போய் சிறிது நேரம் அழுதுவிட்டேன் செட்டுக்குள் வந்தேன். அந்த காட்சிக்கு இப்போது தியேட்டரிலும் நல்ல கைதட்டல் கிடைக்கிறது. அதோடு, இந்த கதையில் உள்ள எமோஷனல்தான் படத்தின் வெற்றிக்கு கூட காரணம் என்று நினைக்கிறேன் என்கிறார் காளி வெங்கட்.