இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கும்கி படம் வெளியானபோதே தனுஷை வைத்து தற்போது இயக்கியுள்ள ரயில் படத்தை இயக்க நினைத்தார் பிரபுசாலமன். ஆனால் அப்போது அந்த கதையை தயாரிக்க சரியான தயாரிப்பாளர் கிடைக்காததால் கும்கியை முடித்ததும் கயல் படத்தை இயக்கினார். அதையடுத்து தயாரிப்பாளர் கிடைத்ததால் இப்போது ரயில் படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஒரு ரயிலுக்குள் நடக்கும் கதை என்பதால் ரயில் செட் போட்டு படமாக்கினார்.
மேலும், ரயிலை கடத்த தீவிரவாதிகள் முயற்சி செய்யும்போது அவர்களிடமிருந்து பயணிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுடன் கடும் சண்டை செய்து முடிவில் அவர்களை போலீசில் ஒப்படைப்பாராம் தனுஷ். இந்த சண்டை காட்சிகள் அனைத்துமே வடஇந்தியாவில் ஓடும் ரயிலுக்கு மேல் நின்றபடி தனுஷ் சண்டை செய்வதை படமாக்கினாராம் பிரபுசாலமன். முக்கியமாக, ரயில் அதிக வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது இந்த காட்சி படமாக்கப்பட்டதாம். அதில் எந்தவித அச்சமோ, தயக்கமோ இல்லாமல் தைரியமாக இறங்கி நடித்தாராம் தனுஷ்.
அதுபற்றி பிரபுசாலமன் கூறுகையில், தனுஷ் ஒரு அனுபவசாலி நடிகர். கதையை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப நடிப்பை சரியாக கொடுத்திருக்கிறார். அதோடு ஏற்கனவே அவர் ஆக்சன் படங்களில் நடித்திருப்பதால் இந்த படத்தில் அந்த படங்களை விடவும் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், ரயில் சண்டை காட்சிகளில் அவர் நடித்திருப்பது பெரிய சாகசம் செய்ததுபோலவே அமைந்துள்ளது என்கிறார்.