‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இன்றைய வசூல் நாயகனாக உயர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடம் முடிந்து, ஐந்தாவது வருடம் ஆரம்பமாகிறது. 2012ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அடுத்த ஒரு மாதத்திலேயே அவர் நண்பன் கதாபாத்திரத்தில் நடித்த '3' படமும் வெளிவந்தது. இரண்டு படங்களும் சிவகார்த்திகேயனுக்கு டிவியில் கிடைத்த பெயரை விட கொஞ்சம் குறைவான பெயரையே பெற்றுத் தந்தது.
அதே ஆண்டில் வெளிவந்த 'மனம் கொத்திப் பறவை' படத்தில் தனி கதாநாயகனாக உயர்ந்து நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார். 2013ல் வெளிவந்த 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கடுத்து வெளிவந்த 'எதிர் நீச்சல்' படம் சிவகார்த்திகேயனுக்கு தனி ஹீரோவாக ஒரு பெரிய ஓபனிங்கை ஏற்படுத்திக் கொடுத்தது. அடுத்து வெளிவந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் வசூல் ரீதியாக மிகப் பெரிய சாதனையை ஏற்படுத்தி சிவகார்த்திகேயனை ஒரு உயரத்தில் கொண்டு சென்று அமர வைத்தது.
அடுத்து வெளிவந்த 'மான் கராத்தே, காக்கிச் சட்டை' ஆகிய படங்கள் சிவகார்த்திகேயனை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக மாற்ற பெரிதும் உதவியது. பொங்கலுக்கு வெளிவந்த 'ரஜினி முருகன்' திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து அவருக்கென ஒரு தனி வியாபாரத்தை தமிழ்த் திரையுலகத்தில் உருவாக்கிக் கொடுத்துள்ளது.
தனது முதல் படமான 'மெரினா'வில் 50,000 ரூபாய் கூட சம்பளம் வாங்காத சிவகார்த்திகேயன், நான்கே வருடங்களில் 50 கோடி ரூபாய் வசூலைக் கொடுக்கும் ஒரு நாயகனாக உயர்ந்ததற்கு காரணம் அவருடைய முயற்சியும், உழைப்பும்தான் என்பது உண்மையான விஷயம். எந்த திரைப்படப் பின்னணியும் இல்லாமல் டிவியில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, தொகுப்பாளராக உயர்ந்து இன்று நாயகனாகவும் உயர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்து நிற்கிறார்.