ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அரண்மனை -2 படத்தில் தன்னை டம்மியாக்கிவிட்ட கோபத்தில் இயக்குநர் சுந்தர்.சி உடன் சித்தார்த் தகராறு செய்தார் என்று திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அவரை குறிப்பிடும் வகையில் தான் நாகூர் பிரியாணி - நாய் உதாரணம் சொல்லி சில தினங்களுக்கு முன் ட்வீட் பண்ணினாராம் சித்தார்த். அதை ரஜினி, தனுஷுக்கு எதிராக சிலர் திருப்பிவிட்டதும் அப்ஸெட்டாகி அமைதியாக இருந்தார்.
அரண்மனை - 2 படத்தில் தான் டம்மியாக்கப்பட்டதைக் கண்டு வருத்தத்தில் இருந்த சித்தார்த், அடுத்து வரவிருக்கிற ஜில் ஜங் ஜக் படம் தன்னை உச்சத்துக்குக் கொண்டுபோகும் என்ற நம்பிக்கை காரணமாக தற்போது உற்சாகத்தில் இருக்கிறார். ஜில் ஜங் ஜக் படத்தில் அப்படத்தின் இயக்குநர் தீரஜ் வைத்தி உட்பட சில இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் சித்தார்த். அவர்கள்தான் சித்தார்த் உடன் சேர்ந்து அவருக்கு பொருத்தமான கதையாக இந்த ஸ்கிரிப்ட்டை உருவாக்கியவர்கள்.
இந்தப் படம் வெற்றியடைந்தால், அந்த இளைஞர்களைக் கொண்டு தனக்கான கதைகளை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். “அவர்களோட முழு நேர வேலையும் கதைகளை உருவாக்குவதுதான். அப்படி அவர்கள் உருவாக்கும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்க முடிவு செய்துள்ளேன். 'ஜில் ஜங் ஜக்' படத்தை தொடர்ந்து ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளேன்.” என்கிறார் சித்தார்.
'ஜில் ஜங் ஜக்' சுத்தமான தமிழ் வார்த்தை கிடையாதே... வரிவிலக்கு கிடைக்குமா? என்றால், “இந்தப் படத்தை ஆரம்பிக்கும்போதே இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பது தெரியும். அதனால் வரி விலக்குக்கு விண்ணப்பிக்கவில்லை.” என்கிறார்.
தெளிவுதான்...!