தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர்களின் பிறந்தநாள் என்றால் பிரம்மாண்டமான கேக் வெட்டுதல், ரசிகர்களுடன் கொண்டாட்டம், அனாதை இல்லங்களுக்கு சென்று அன்னதானம், நண்பர்களுக்கு பார்ட்டி என்று களைகட்டும். இன்று சிம்புவின் பிறந்தநாள். மேற்சொன்ன எந்த வைபவமும் இல்லாமல் வீட்டுக்குள்ளேயே எளிமையாக தன் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் சிம்பு.
சிம்புவின் பிறந்தாள் படு அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது.
பீப் சாங் என்ற பெயரில் ஆபாசப்பாடலை உருவாக்கியதற்காக நடிகர் சிம்பு மீது தமிழகம் முழுக்க பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. காவல் நிலையங்களிலும் அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பீப் சாங் விவகாரத்தில் காவல்துறையின் நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவாகவே இருந்து வந்த சிம்பு, எப்படியாவது கைது நடவடிக்கையிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று வழக்குமேல் வழக்கு தொடுத்து வருகிறார்.
இதனிடையே சிம்புவின் பிறந்தநாளான இன்று இது நம்ம ஆளு படத்தின் இசைவெளியீட்டை பிரம்மாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டிருந்தார் டி.ராஜேந்தர். ஆனால் கடைசி நேரத்தில் அந்த விழாவை ரத்து செய்துவிட்டார் டி.ராஜேந்தர். அதோடு, இதுநாள் வரை தலைமறைவாக இருந்து வந்த சிம்பு, இன்று தன் பிறந்தநாள் என்பதால் வெளி உலகிற்கு வந்துள்ளார். பிறந்தநாளை முன்னிட்டு தன் வீட்டில், தன் குடும்பத்தாருடன் மிக எளிமையாக கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.