டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்தியாவின் நம்பர்-1 நடிகையான பிரியங்கா சோப்ரா. குவாண்டிகா என்ற அமெரிக்க டி.வி தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளர். சிறந்த டி.வி. நடிகைக்கான உயர்ந்த விருதையும் பெற்றுள்ளார். விரைவில் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் உலக புகழ்பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்திய நடிகை ஒருவருக்கு கிடைத்திருக்கும் முதல் அங்கீகாரம் இது.
ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் வருகிற 28ந் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இதன் தொகுப்பாளர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ராவும் தேர்வாகி உள்ளார். இதனை ஆஸ்கார் அமைப்பின் அதிகாரபூர்வ இணையதளம் நேற்று அறிவித்தது. இதற்கு முன்பு கடந்த 30ந் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 22வது ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு அவார்ட் நிகழ்ச்சியை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அவரது சிறப்பான பணியை கண்ட ஆஸ்கர் அமைப்பு அவருக்கு இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
“ஆஸ்கர் விருது நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது நான் மகிழ்சியில் மிதந்து கொண்டிருக்கிறேன்” என்ற பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.