புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. போலீசில் ஆஜரா காலஅவகாசம் கேட்டு ஏற்கெனவே 3 முறை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். 3வது மனுவில் ஜனவரி 29ந் தேதி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று கோர்ட் கூறியது. ஆனால் அப்போதும் ஆஜராகாத சிம்பு மீண்டும் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார். இதனால் இப்போதைக்கு சிம்பு போலீசில் ஆஜராகத் தேவையில்லை. சிம்பு மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் சொந்த ஜாமீனில் வெளிவரக்கூடிய எளிய பிரிவுகள்தான். எதையும் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறிவரும் சிம்பு. போலீசில் ஆஜராவதற்கு தயங்குவது ஏன் என்பது பெரிய கேள்விக்குறியை எழுப்பி உள்ளது.