'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை சில நிறுவனங்கள் முறைகேடாக விற்பனை செய்து வருவதாகவும், ஒலிபரப்பி வருவதாகவும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் இளையராஜாவின் பாடல்களை விற்கவும், ஒலிபரப்பவும் 5 நிறுவனங்களுக்கு தடைவிதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த 5 நிறுவனங்களும் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கோர்ட், இந்த பிரச்னையை தீர்க்க ஒய்வு பெற்ற நீதிபதி பி.கோகுல்தாசை சட்ட ஆணையராக நியமித்தது. அதன்படி இந்த வழக்கு ஐகோர்ட்டின் சமரச தீர்வு மையத்திற்கு வந்தது. நேற்று இந்த மையத்தின் முன் சமரச பேச்சு நடந்தது. இதில் 5 நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டர். இளையராஜாவும் நேரில் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி கோகுல்தாஸ் விசாரணையை 25ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.