‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
2006ல் பிருத்விராஜ், ஜெயசூர்யா கூட்டணியில் மலையாளத்தில் வெளியான 'கிளாஸ்மேட்ஸ்' படத்தில் நரேனின் கேரக்டரையும் நடிப்பையும் பார்த்தவர்கள், இவர் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என ஆருடம் சொன்னார்கள். ஆனால் வருடத்திற்கு ஐந்து படங்களாவது நடித்து விடும் மலையாள நடிகர்கள் மத்தியில், இவரோ தமிழ் நடிகராகவே மாறிவிட்டார் என்று சொல்லும் அளவுக்கு தமிழ்நாட்டிலேயே முகாமடித்து அமர்ந்துவிட்டார் நரேன். கடந்த 2014ல் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்தவர், அதன்பிறகு இப்போது ஒரே ஒரு மலையாள படத்தில் தான் நடித்து வருகிறார்..
'ஹல்லேலூஜா' என்கிற இந்தப்படத்தில் கிராமத்தில் உள்ள முரட்டு வாலிபனாக நடித்து வருகிறார் நரேன். மலையாளத்தில் ஏன் அதிகம் நடிப்பதில்லை என கேட்டால், தமிழில் அதிக கவனம் செலுத்துவதாகவும் மலையாள படங்களை போல ஷூட்டிங்ஸ்பாட் போய் நடிப்பதுடன் தமிழில் வேலை முடிவடைவதில்லை எனவும், இங்கே படம் முடிந்து ரிலீசாகும் வரை பல்வேறு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதாகவும் அதனால் தான் மலையாளத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த முடியவில்லை என்றும் பதிலளிக்கிறார் நரேன்.
சென்னையிலேயே சுற்றினாலும் தனது நெருங்கிய மலையாள நண்பர்களான பிருத்விராஜ், ஜெயசூர்யா, இந்திரஜித் ஆகிய மூவருடனும் அவ்வப்போது போனில் பேசி, நட்பில் இடைவெளி வராமல் பார்த்துக்கொள்கிறார் நரேன். சென்னை, மழைவெள்ளத்தில் சிக்கித்தவித்த சமயத்தில் இங்கிருந்த நடிகர் சங்கம் சார்பாக நிவாரணப்பணிகளுக்காக களம் இறங்கிய நரேன், கேரளாவில் உள்ள இந்த நண்பர்கள் உதவியுடன் தான் மலையாள சினிமா நட்சத்திரங்கள் சென்னைக்காக கொடுத்த நிவாரண உதவிகளை ஒருங்கிணைத்தாராம். அதில் நட்பு இன்னும் இறுகியதாம்.. மீண்டும் இந்த மூவருடன் இணைந்து நடிக்கமாட்டோமா என்கிற ஏக்கம் நீண்ட நாட்களாகவே இருக்கிறது என ஏக்க பெருமூச்சு விடுகிறாராம் நரேன்.