மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
'கபாலி' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் நேற்று மலேசியா புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்திலேயே அரை மணி நேரத்திற்கும் மேலாக செலவிட்டார் ரஜினிகாந்த். விமான நிலையத்திலேயே பலர் அவரைப் பார்க்க முந்திச் சென்றனர். விமானத்திற்குள் சென்றாலும் ரஜினிகாந்தை ரசிகர்கள் விடவில்லை. நேற்று விமானத்திற்குள் ரஜினிகாந்த் சென்ற பிறகும் அவரை நட்சத்திர ரசிகர்கள் விடவில்லை. அந்த நட்சத்திரங்கள் வேறு யாருமில்லை பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான்' படங்களின் நாயகி ஆஷ்னா சவேரிதான் அவர்கள்.
'மீன் குழம்பும் மண் பானையும்' படத்தில் நடிப்பதற்காக மலேசியா செல்வதற்காக அவர்கள் சென்ற அதே விமானத்தில்தான் ரஜினியும் பயணித்துள்ளார். ரஜினிகாந்தைப் பார்த்ததும் இருவரும் அவரிடம் சென்று பேசி புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இருவருமே சற்று நேரத்திலேயே அந்த புகைப்படத்தை அவர்களது டிவிட்டரில் வெளியிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காளிதாஸ், 'இந்த நாள் அவ்வளவு இனிமையான நாளாக அமைந்தது,' ஆஷ்னா சவேரி, “ஓ மை காட், இன்றைய சிறப்பான நாள், ஒரு ரசிகையின் சந்தோஷம்,” என்றும் தெரிவித்திருந்தனர்.
மலேசியாவையும், கபாலியையும், ரஜினிகாந்தையும், புகைப்படத்தையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது.