இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'குற்றப் பரம்பரை' படம்தான் தனது கனவுப் படமென கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் பாரதிராஜா சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதைப் படமாக்கும் முயற்சி கை கூடாமல் தள்ளிப் போய்க் கொண்டேயிருக்கிறது. இதனிடையே கடந்த சில வாரங்களாக இயக்குனர் பாலா 'குற்றப் பரம்பரை' கதையை படமாக்கப் போவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. இது பற்றி கேள்விப்பட்டதும் இயக்குனர் பாரதிராஜா கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“குற்றப் பரம்பரை' படத்தின் கதையை அவரும் கதையாசிரியருமான ரத்தினகுமார் ஆகியோரும் பல நாட்கள் உட்கார்ந்து ஆலோசனை செய்து உருவாக்கியுள்ளார்களாம். ஆனால், 'குற்றப் பரம்பரை' கதையை பாலா படமாக்கப் போகிறார் என்ற செய்தி வெளியானதும் பாலாவை அழைத்து பாரதிராஜா யார் இந்தக் கதையைக் கொடுத்தது என்று கேட்டிருக்கிறார். அதற்கு எழுத்தாளர் வேல ராமமூர்த்திதான் இந்தக் கதையைக் கொடுத்ததாகவும் பாலா சொல்லியிருக்கிறார். அதன் பின் பாலாவிடம் பாரதிராஜா பேசுவதையே தவிர்த்துவிட்டார் என்கிறார்கள். எனது படைப்பில் உருவான 'குற்றப் பரம்பரை' கதையை இன்னொருவர் சொந்தம் கொண்டாட முயற்சிப்பது மன்னிக்க முடியாத துரோகம் என்கிறார் பாரதிராஜா.
ஆங்கிலேயர் நம்மை ஆண்ட காலத்தில் எனது முன்னோர்களும் ரத்தம் சிந்தி போராடியுள்ளார்கள். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தக் கனவுப் படைப்பை பிரம்மாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளேன். தற்போதுதான் இதற்கான முதலீட்டார்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி முடித்துள்ளேன். பாரதிராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு பாலா பதில் சொல்வாரா அல்லது 'தாரை தப்பட்டை' படத்திற்காக யாரையும் சந்திக்காமல் அமைதியாக இருந்ததைப் போல இதற்கும் அமைதியாக இருக்கப் போகிறாரா ?.