ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வாலி படத்தில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, நியூ படத்தின் மூலம் ஹீரோவான பிறகு இனி மற்ற ஹீரோக்களை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று அறிவித்தார். ஒருகட்டத்தில் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் வரிசையாக தோல்வியடைந்ததினால், தன் முடிவை மாற்றிக் கொண்டு மற்ற ஹீரோக்களை இயக்கும் முடிவுக்கு வந்தார்.
அது மட்டுமல்ல விஜய்க்கு பொருத்தமான கதை ஒன்றை தயார் செய்து அவரிடம் சொல்லி ஓகே பண்ணினார். இந்நிலையில் அட்லி, பரதன் என மற்ற இயக்குநர்களுக்கு விஜய் அடுத்தடுத்து கால்ஷீட் கொடுத்ததினால், பின்னுக்குத்தள்ளப்பட்ட எஸ்.ஜே.சூர்யா தெலுங்குப்பட நாயகன் 'பவர்ஸ்டார்' பவன் கல்யாணிடம் ஒரு கதை சொன்னார்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், குஷி, 'புலி' ஆகிய தெலுங்குப் படங்களில் ஏற்கெனவே நடித்திருக்கிறார் பவன் கல்யாண். எனவே அவரது திறமையை அறிந்து வைத்துள்ள பவன், எஸ்.ஜே.சூர்யா சொன்ன அந்தக்கதையில் நடிக்க ஓகே சொல்லியிருந்தார். அதற்கான வேலையில் ஈடுபட்டிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
இதற்கிடையில், கடந்த தீபாவளிக்கு வெளியான அஜித்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஆர்வம் காட்டி இருக்கிறார் பவன் கல்யாண். இதை அறிந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சமீபத்தில் பவன் கல்யாணை நேரில் சந்தித்துப் பேசிவிட்டு வந்துள்ளார். அனேகமாக பவன் கல்யான் நடிக்க வேதாளம் தெலுங்கு ரீமேக்கை எஸ்.சூர்யா இயக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.