பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள் சங்கமும், வி4 என்ற அமைப்பும் இணைந்து 2015ம் ஆண்டின் சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தியது. சென்னை ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடந்த இந்த விழாவில், பாபநாசம் படத்தில் சிறப்பாக நடித்தற்காக சிறந்த நடிகருக்கான விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. ஏவிஎம் சரவணன் வழங்கினார்.
விருதைப் பெற்றுக்கொண்ட கமல் பேசியதாவது: சினிமா என்பது நல்ல தொழில். நேர்மையான தொழில், நேர்மையாக இருப்பவர்களை சினிமா தொழில் கைவிடாது. நேர்மையாக இருப்பவர்கள் தங்கள் வாரிசுகளையும் சினிமாவுக்கு கொண்டு வருகிறார்கள். நேர்மை இல்லாதவர்கள் வர விடுவதில்லை. பள்ளிக்கூடம் போகாத நான் வெளிநாட்டு பல்கலைகழத்தில் உரையாற்றப்போகிறேன். இந்த உயரத்தை கொடுத்தது சினிமா. அதை மறந்தால் நான் நன்றி கெட்டவன் ஆவேன். எனது பள்ளிக்கூடம் ஏவிஎம் நிறுவனம்தான். அது என்னை தன் பிள்ளையாக வளர்த்தது.
இன்று புதிய கலைஞர்கள், இயக்குனர்கள் நிறைய பேர் சினிமாவுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். எங்களை விட வேகமாக ஓடுங்கள். அதுதான் எங்கள் வியர்வைக்கு நீங்கள் தரும் மரியாதை. எதையும் ஒத்திகை பார்த்து செய்யுங்கள், பணமும், நேரமும், உழைப்பும் மிச்சமாகும். இவ்வாறு கமல் பேசினார்.
விழாவில், அரவிந்த் சாமி (சிறந்த வில்லன்), மணிகண்டன் (சிறந்த இயக்குனர்), விக்னேஷ் சிவன் (இளம் இயக்குனர்), சுந்தர்.சி (கமர்ஷியல் இயக்குனர்), தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி (தயாரிப்பாளர்) ஆகியோரும் விருது பெற்றனர்.