ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய வெளுத்துக்கட்டு படத்தில் அறிமுகமான அருந்ததி, அதற்கு பிறகு பல படங்களில் நடித்திருந்தாலும், கடைசியாக நடித்த நாய்கள் ஜாக்கிரதை படம்தான் அவருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. தற்போது அவர், 'அர்த்தநாரி' என்ற படத்தில் போலீஸ் ஆபீசராக நடித்து வருகிறார். ராம்குமார் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். பாலாவின் உதவியாளர் சுந்தர இளங்கோவன் படத்தை இயக்குகிறார். போலீஸ் அதிகாரியாக நடிப்பதற்காக போலீஸ் பயிற்சி எடுத்துள்ளார்.
இதுபற்றி அருந்ததி கூறியதாவது: இதில் நான் சவால்கள் நிறைந்த ஒரு அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்த கேரக்டருக்காக நான் நிறையவே ஹோம் வொர்க் செய்து, என்னை முழுமையாகத் தயார் செய்து கொண்டேன். துப்பாக்கியைப் எப்படி பிடிப்பது? ட்ரிக்கரை எப்படி அழுத்துவது என்பது வரை எல்லாமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு போலீஸ் அதிகாரியிடம் இரண்டு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். சண்டைக்காட்சிகளில் ஒரு நிஜ போலீஸ் போலவே குதிப்பது, உதைப்பது எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக, சண்டைப் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன்.
அவை எல்லாம் மிக சிரமமாக இருந்தாலும் கேரக்டருக்கு தேவை என்பதால் கஷ்டத்தை பார்க்காமல் பயிற்சி எடுத்துக்கொண்டேன். இந்த கேரக்டரை மிக சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக தி புளூ ஸ்டீல், தி போன் கலெக்டர், மருதாணி படங்களைப் பார்த்தேன். அந்தப் படங்களை பார்த்த பிறகு எனக்குள் ஒரு சக்தியே வந்தது. என்கிறார் அருந்ததி.