Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அழியாத கோலங்கள், பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம்: இயக்குனர் நெகிழ்ச்சி

01 பிப், 2016 - 15:20 IST
எழுத்தின் அளவு:
azhiyatha-kolangal-to-be-dedicate-for-Balumahendra-says-MR-Bharathi

பத்திரிக்கையாளரான எம்.ஆர்.பாரதி, 'அழியாத கோலங்கள்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். பிரகாஷ்ராஜ், அர்ச்சனா, ரேவதி, ஈஸ்வரி ராவ், நாசர் நடித்துள்ளனர். ராஜேஷ் கே.நாயர் ஒளிப்பதிவு செய்துள்ளார். அரவிந்த் சித்தார்த் இசை அமைத்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகிவிட்டது. “அழியாத கோலங்கள் பாலுமகேந்திராவின் முதல் படம். இந்தப் படத்தையும் அவருக்கே சமர்ப்பணம் செய்கிறோம்” என்கிறார் இயக்குனர் எம்.ஆர்.பாரதி.

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: பாலுமகேந்திராவிடம் ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடம் அவரோடு நட்பைத் தொடர்ந்தவன். பாலுமகேந்திராவின் படங்களைப் போலவே தரமான, மிக இயல்பான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனது முதல் படமான இந்த அழியாத கோலங்கள் அப்படி அமைந்து விட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. படத்தின் கதைக்கு அவரது படமே மிகப் பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்பதால் அதே தலைப்பையே இந்தப் படத்திற்கும் சூட்டிவிட்டோம். அதோடு எனது முதல்படம் எனது மானசீக குருவிற்கு அஞ்சலியாக சமர்பணம் செய்வதில் எனக்கு முழு திருப்தி

24 வருடங்கள் கழித்து ஒரே கல்லூரியில் படித்த இரண்டு நண்பர்கள் - ஒரு ஆண், ஒரு பெண் - சமீபத்தில் பெய்த ஒரு பெருமழை நாளில் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பும் அதன் பிறகான நிகழ்வுகளும்தான் கதை. இந்தக் கதைக்கு யார் தேவைப்பட்டார்களோ அவர்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் பிசியான நடிகர் பிரகாஷ்ராஜ். ரேவதி மூலமாக கதை கேட்டதுமே எங்களுக்கு தேதிகள் ஒதுக்கிக் கொடுத்து முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர்தான் கதையின் நாயகன். ஒரு எழுத்தாளர் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். அவரது கல்லூரிச் சினேகிதியாக அர்ச்சனா.

இந்தப் படத்தில் ஒரு பாடல் மற்றும் ஒரு கவிதை இடம் பெற்றிருக்கிறது. கவியரசு வைரமுத்து பாடல் எழுதியதோடு ஒரு காட்சியின் சூழ்நிலைக்கேற்ப அந்தக் கவிதையை அற்புதமாக எழுதிக் கொடுத்தார். கவிஞரின் பாடல்களை சினிமாவில் கேட்டிருக்கிறோம். அவரது கவிதையை திரையில் கெளரவித்த பெருமை எங்களுக்கு உண்டு. இவ்வாறு எம்.ஆர்.பாரதி கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in