ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பெங்களூரில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குனர் மணிரத்னம் கலந்து கொண்டார். விழாவையொட்டி நடந்த கருத்தரங்கில் அவர் பேசும்போது கூறியதாவது: தணிக்கை குழு சுயசார்புடன் செயல்படும் அமைப்பு. ஆனால் பல ஆண்டுகளாக அப்படி அது நடந்து கொள்வதில்லை. தன் சுயசார்பை இழந்து ஆளும் கட்சிக்கு கட்டுப்பட்டு, அதன் விருப்பப்படி செயல்படுகிறது. எனது மும்பை, இருவர் படங்கள் தணிக்கை குழுவால் பெரும் சோதனைகளை சந்தித்தது.
இன்றைக்கு ரசிகர்கள் சினிமா பற்றி அதிகம் அறிந்த வைத்திருக்கிறார்கள். அவர்களின் ரசிப்புத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தணிக்கை குழுவை சீரமைக் இயக்குனர் ஷியாம் பெனகல் தலைமையில் ஒரு சீரமைப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதும். அதில் கமல் உள்ளிட்ட கலைஞர்கள் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.