துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
திலீப்பே எதிர்பார்க்கவில்லை.. நான்கு பிளாப்களுடனும் ஒரே ஒரு சுமார் ஹிட்டுடனும் கடந்த 2015ஆம் வருடம் அப்படியே போய்விடும் என்றுதான் நினைத்தார்.. அதனால் தான் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று அவருடைய நடிப்பில் வெளியான '2 கண்ட்ரீஸ்' படத்தின் மீது கூட அவர் அவ்வளவாக எதிர்பார்ப்பு வைக்கவில்லை. ஆனாலும் படம் மரியாதையான வெற்றிபெறும் என்று நினைத்தவருக்கு இப்போது வசூலில் 50 கோடி ரூபாய் கிளப்பை நோக்கி படம் ஓடிக்கொண்டிருப்பது நம்பமுடியாத, அதேசமயம் அளவில்லாத உற்சாகத்தை தந்துள்ளது.
இந்த வெற்றியை அவருக்கு சாத்தியமாக்கியது படத்தின் இயக்குனர் ஷபியும் கதாசிரியர் ரபியும் தான். படம் முழுவதும் நான்ஸ்டாப் காமெடிக்கு உத்தரவாதம் தந்திருந்ததால் மவுத் டாக் வழியாகவே இந்தப்படம் பிக்கப் ஆனது. இதுவரை மலையாள சினிமா வரலாற்றில் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த படங்கள் பட்டியலில் 'த்ரிஷ்யம், பிரேமம்', 'என்னு நிண்டே மொய்தீன்' என மூன்று படங்கள் மட்டுமே உள்ளன. 'பெங்களூர் டேய்ஸ்' படம் கூட 48 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து இந்த கிளப்பில் இணையும் வாய்ப்பை மயிரிழையில் தவறவிட்டது.. இப்போது '2 கண்ட்ரீஸ்' படம் இதுநாள் வரை கேரளாவில் மட்டும் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம்.
கேரளா தவிர மற்ற மற்ற சில மாநிலங்களிலும், இந்தியா தவிர வெளி நாடுகளிலும் சேர்த்தால் இது 35 கோடியை தாண்டும் என்கிறார்கள் விநியோகஸ்தார்கள்.. படம் வெளியாகி இன்றோடு 40 நாட்கள் ஆன நிலையில் கேரளாவில் 72 தியேட்டர்களில் தினசரி நான்கு காட்சிகளும், ஐக்கிய அரபு நாடுகளில் தினசரி 152 காட்சிகளும், இங்கிலாந்தில் தினசரி 63 காட்சிகளும் ஓடிக்கொண்டு இருக்கின்றதாம். இதே ரீதியில் போனால் படம் 50வது நாளை தொடும்போது 50 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கும் என்றும் வியாபார ரீதியாக ஆருடம் சொல்லப்படுகிறது.