பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழக மக்களை காப்பாற்றத் தான், முதல்வர், டாஸ்மாக் கடையை திறந்து வைத்துள்ளார், என, நடிகர் ஆனந்தராஜ் பேசினார். சென்னை, மாதவரத்தில், அ.தி.மு.க., ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, நடிகர் ஆனந்தராஜ் பேசியதாவது:
தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி ஆகியோர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் கடையை உடனே மூடி விடுவோம் என்று குரல் கொடுக்கின்றனர். அப்படியெல்லாம் நினைத்ததும், தமிழகத்தில் மதுக்கடைகளை மூடிவிட முடியாது. மது குடிப்பதற்கு, பர்மிட் முறை உள்ளது தெரியாமல் பேசுகின்றனர். ஜெயலலிதா நினைத் தால் மட்டுமே, தமிழகத்தில், டாஸ்மாக் கடையை மூட முடியும். அவர், அப்படி மூடிவிட்டால், கள்ளச் சாராயம் பெருத்துவிடும்; அதன்மூலம் உயிரிழப்புகள் அதிகமாகும்.
அதனால் தான், தமிழக மக்களை காக்க, தன் மனதை கல்லாக்கி கொண்டு, டாஸ்மாக் கடையை திறந்து வைத்து உள்ளார். கண்ட இடங்களில், காறித் துப்பும் விஜயகாந்த், அரசியல்வாதியே இல்லை என்பது, இரண்டு மாதங்களில் தெரிந்து விடும். இவ்வாறு அவர் பேசினார்.