பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
அஞ்சான், மாஸ், பசங்க-2 படங்களுக்குப்பிறகு சூர்யா நடிப்பில் 24 படம் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை முடித்ததும் சிங்கம்-3யில் நடிக்கயிருந்தார். ஆனால், 24 படம் இறுதிகட்டத்தில் இருந்தபோது வெளியான இன்று நேற்று நாளை படத்தின் கதை 24 படம் சாயலில் இருந்ததால் அவசர கதியில் சில திருத்தங்களை செய்து மறு படப்பிடிப்பு நடத்தினர். அதனால் ஏற்கனவே திட்டமிட்டதைவிட அதிகப்படியாக 4 மாதங்கள் டைரக்டர் ஹரி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதனால், தீபாவளிக்கு பிறகு தனது எஸ்-3 படப்பிடிப்பை காரைக்குடியில் நடத்த திட்டமிட்டிருந்தார் ஹரி. ஆனால் மழை கொட்டித்தீர்த்ததால் படப்பிடிப்பு லொகேசனை விசாகப்பட்டினத்துக்கு மாற்றினார். ஆக, கடந்த ஒன்றரை மாதமாக எஸ்-3 படப்பிடிப்பு அங்கு மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது. ஏற்கனவே செம ஸ்பீடாக இருக்கும் ஹரி, இந்தபடத்தில் இன்னும் அதிக வேகம் காட்டி இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிவிட்டார். இதையடுத்து ஏற்கனவே திட்டமிட்டிருந்த காரைக்குடி லொகேசனில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த தயாராகிக்கொண்டிருக்கிறார். தனது படங்களில் தூத்துக்குடி லொகேசனில் படப்பிடிப்பு நடத்து வதை வாடிக்கையாகக்கொண்டிருந்த ஹரி, இந்த படத்தில் அதற்கு பதிலாக காரைக்குடி லொகேசனை பயன்படுத்துகிறாராம். அங்குள்ள பழங்கால வீடுகளில் விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறதாம். அதைத் தொடர்ந்து பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகள் செல்ல திட்டமிட்டுள்ளாராம் டைரக்டர் ஹரி.