தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளப்பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல் நடித்த படம் பாபநாசம். திரிஷ்யம் ரீமேக்கான இப்படம் கமலுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. அந்த படத்தில் கெளதமி, ஆஷாசரத், கலாபவன்மணி உள்ளிட்ட பலரும் நெல்லை தமிழ் பேசி அசத்தலாக நடித்திருந்தனர். இதே படத்தில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேரக்டரில நடித்தவர் ரோஷன் பசீர். கதைப்படி அப்படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த ஆஷாசரத்தின் மகனாக நடித்த இவர்தான் கமலின் மகளாக நடித்த நிவேதா தாமஸை ஆபாசமாக செல்போனில் படம் பிடித்து விட்டு பிளாக்மெயில் செய்வார். பின்னர் அவர் அடித்து கொலை செய்யப்படுவார். இதிலிருந்துதான் கதை சூடுபிடிக்கும்.
அந்த வேடத்தில் ரோஷன் பசீர் நடித்தபோது அவருக்கு அவ்வப்போது நடிப்பு டிப்ஸ் கொடுத்தாராம் கமல். அதை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ற நடிப்பை அவர் பிரதிபலித்தாராம். ஆக, அந்த படத்தில் சிறிய வேடம் என்றாலும் கவனிக்கப்படும் வேடத்தில் நடித்த அவர், இப்போது மூன்று ரசிகர்கள் என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தங்களது அபிமான ஹீரோவை தேடிக்கொண்டு கிராமத்தில் இருந்து மூன்று இளைஞர்கள் சென்னைக்கு வருவதுதான் இந்த படத்தின் கதை. இதில் நாயகனாக நடித்திருக்கும் ரோஷன் பசீர், ஒரு ஹீரோ தன்னை எந்தெந்த வகையில் தயார் பண்ணிக்கொண்டு கேமரா முன்பு வர வேண்டும் என்று கமல் கொடுத்த சில அட்வைஸ்களை மனதில் கொண்டு இந்த படத்தில் தான் சிறப்பாக நடித்திருப்பதாக கூறுகிறார்.