டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பெரிய நம்பிக்கையோடு தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்தவர் சானியாஷேக், ஒருவர் மீது இருவர் சாய்ந்து முதல் படம். அதன் பிறகு பனிவிழும் மலர்வனம், அதுவேற இதுவேற, ஜிகினா, வாராயோ வெண்ணிலாவே படங்களில் நடித்தார். சுசீந்திரன் இயக்கிய ஜீவா படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார். எந்த படமும் அவருக்கு சரியாக அமையாதால் ஒரு முழுமையான ஹீரோயினாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. பெயரைக்கூட சானியாதரா என்று மாற்றிப் பார்த்தார் அதிலும் பலன் கிடைக்கவில்லை.
அவர் நடித்து முடித்திருக்கும், சங்கராபுரம், தகடு தகடு, மெய்மறந்தேன், கடை எண் 6 படங்கள் வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. புதிய படத்திற்கான வாய்ப்பும் வரவில்லை. நடித்து முடித்துள்ள படங்கள் வெளிவந்து அதில் ஒரு படமாவது வெற்றி பெற்றுவிட்டால் தானும் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார். புதிதாக போட்டோ ஷ¨ட் நடத்தி புதிய மானேஜரை நியமித்து புதிய வாய்ப்புகளையும் தேடி வருகிறார்.
“எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் அது வந்துவிட்டால் தடுத்தாலும் நிற்காது. வருகிற ஏனோதானோ படங்களில் நடிக்கலாம், வருஷம் முழுக்க படப்பிடிப்பு போகலாம். அதில் எனக்கு விருப்பமில்லை. அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்” என்கிறார் சானியாதரா.