ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகரும், இயக்குநர், மேடை பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் விசு. 70 வயதாகும் விசு, தன்னை பா.ஜ.வில் இணைத்து கொண்டார். சென்னை கமலாலயத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அவர் பா.ஜ.,வில் இணைந்தார். பா.ஜ.வில் தன்னை இணைத்து கொண்டது ஏன்., என தினமலர் இணையதளத்தில் அவர் அளித்த முதல்பேட்டி இதோ...
* பா.ஜ.வில் இணைந்தது ஏன்.?
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இதுநாள் வரை நான் குடும்பஸ்தனாக இருந்துவிட்டேன். என்னுடைய தம்பிகள் மூன்று பேரும் 1994-2010-க்குள் வரிசையாக இறந்துவிட்டனர். அவர்களது குடும்பத்தை கரை சேர்க்க நான் தான் போராடினானேன். அதனால் அந்த சமயத்தில் எந்த அரசியல் சார்ந்த சிந்தனைகளும் எனக்கு வரவில்லை. அரட்டை அரங்கம் போன்று சின்னத்திரை நிகழ்ச்சி செய்தபோது நிறைய மாணவர்கள், பொதுமக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த டிவி நிகழ்ச்சி மூலமாக ஜெயா டிவிக்கு போனேன்.
அதிமுக., சந்தித்த தேர்தல்களில், இரண்டு தேர்தல்களில் என் பங்கு இருந்தது. அதன்பிறகு சில காலங்கள் என்னை கூப்பிடவில்லை, ஏன் என்று தெரியவில்லை, யாரை பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை, அம்மா பதவியேற்ற போதும் எனக்கு அழைப்பும் இல்லை. என் மனதினுள் எப்போதும் தேசியமும், தெய்வீகமும் இருக்கும். நான் தீவிர கடவுள் பக்தன். இப்போது என்னுடைய நிலையில் நான் எனது கடமைகளை முடித்துவிட்டேன். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலமாக பா.ஜ.வில் சேரக்கூடிய வாய்ப்பு வந்தது. ஒருவாரம் தான் பேச்சுவார்த்தை நடந்தது. இன்று காலையில் பொன் ராதாகிருஷ்ணன் மூலமாக போய் சேர்ந்தேன்.
* தேர்தல் சமயத்தில் மட்டும் திரையுலக பிரபலங்கள் பரபரப்பாவது ஏன்.?
தமிழ்நாட்டில் தேர்தல் என்று வந்துவிட்டால் கடைக்காரர்களுக்கு தீபாவளி, பொங்கல் மாதிரி வாடிக்கையாளர்களின் பரபரப்பு அதிகமாகிவிடும். அதுமாதிரி தான் இப்பவும் அரசியலில் நிகழ்கிறது.
* ஒரு கட்சியில் சேர பேரம் நடக்கும், உங்களுக்கு எப்படி.?
எனக்கு பெரிய தொகை பரிசாக யாரும் கொடுக்கவில்லை. யாராவது கொடுப்பார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால்... நான் போய் பார்க்கிறேன். எனக்கு கிடைத்தது ஒரு டீயும், சால்வை தான். அதிமுக.,வில் நான் சேரும்போது சொன்னேன், என் தன்மானம் பாதிக்ககூடாது என்று சொன்னேன். அதேத்தான் இப்போது பா.ஜ.வில் இணைந்தபோதும் அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.
* தமிழ்நாட்டில் பா.ஜ.-வால் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வர முடியும் என்று நினைக்கிறார்களா.?
இந்திய அளவில் பா.ஜ.வுக்கு சாதகமான சூழல் தான் இருக்கிறது. இவர்கள் ஆட்சியில் இல்லாதபோது கூட இரண்டு மூன்று சீட் ஜெயித்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு சொல்லணும் என்றால், செருப்பு பயன்படுத்தாத ஒரு கிராமத்தில் செருப்பு தொழிற்சாலை வைத்தால், அந்த ஊரும், ஊர் மக்களும் பயன்பெறுவார்களோ, அந்தமாதிரி பா.ஜ. கட்சியை பற்றி எடுத்து சொன்னால் வரும் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
* நீங்க தேர்தலில் நிற்பீர்களா.?
என்னை தேர்தலில் நிற்க வைப்பார்கள் என்று கருதி இந்த கட்சியில் சேரவில்லை. எனக்கு இப்போது 70வயதாகிறது. என்னுடைய சாய்ஸ் எல்லாமே மக்களிடம் சென்று போய் சேரக்கூடிய பிரச்சாரம் மட்டுமே செய்வேன்.
* விசுவினால் பா.ஜ.வில் மாற்றம் வந்துவிடுமா.?
மாற்றம் என்பது எல்லோருக்கும் தேவை தான். மீடியாக்கள் மூலம் இப்போது விழிப்பபுணர்வு அதிகமாகிவிட்டது. ஊடகங்கள் ஊழலை பற்றி பேச தொடங்கிவிட்டேன். உதாரணத்திற்கு ஒரு வீட்டை கட்டிவிட்டு சாக்கடை கனெக்ஷன் கொடுக்க வேண்டும் என்றால் மூன்று லட்சம், நான்கு லட்சம் பேரம் பேசுகின்றனர். ஊழல் அற்ற சமுதாயம் வர வேண்டும் எல்லோரும் விரும்புகின்றனர்.
சமீபத்தில் பெய்த மழை புயலில் நடிகர்கள் பாலாஜி, சித்தார்த், மயில்சாமி மக்களிடம் பேசப்பட்டனர். அவர்கள் தாங்கள் செய்வதை விளம்பரம் செய்யவில்லை. ஒரு இதய அறுவை சகிச்சை செய்த மயில்சாமி, அத்தனை மழை வெள்ளத்திலும் வாளியை எடுத்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி கொண்டு போய் சேர்த்தார். அவர் காமெடியன் கிடையாது, ஹீரோ. வாழ்ந்தால் மயில்சாமி, பாலாஜி மாதிரி வாழணும், அதற்கு எனக்கு சக்தியை கொடுக்கணும் என்று ஆண்டவனிடம் வேண்டுகிறேன்.
* உங்களுடைய சகநடிகர்கள் யாரையும் பா.ஜ.வில் இணைப்பீர்களா.?
யாரையும் நான் இழுக்கவும் மாட்டேன், யாரையும் நான் போய் கேட்கவும் மாட்டேன். நான் கட்சியில் சேர்ந்த 20 நிமிடத்தில், 200பேர் போன் செய்துவிட்டனர். விரும்பி வருபவர்களை வரவேற்று கட்சியின் மூலம் பலப்படுத்துவேன். இனி என்னுடைய பணி பா.ஜ.வை தமிழ்நாட்டில் மக்களிடத்தில் போய் சேர்ப்பது தான்.
இவ்வாறு அவர் கூறினார்.