இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி என இரண்டு படங்களில் நடித்தார் வடிவேலு. இதில் எலி பெரிய அளவில் தோல்வியடைந்தது. அதோடு கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தது. இதனால் அதன்பிறகு வடிவேலு மீண்டும் காமெடியனாகி விடுவார் எனறு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ, நான் காமெடியனாக நடிப்பதாக இருந்தால் ஹீரோ போன்ற வேடம், அவர்களுக்கு இணையான சம்பளம் வேண்டும் என்று கண்டிசன் போட்டார். இதனால் அவர் நடிக்கயிருந்த தெறி படவாய்ப்புகூட நான்கடவுள் ராஜேந்திரனுக்கு கைமாறி விட்டது.
இந்த நிலையில், புத்தாண்டு பிறந்த பிறகு புதிய படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த வடிவேலு, தற்போது அடுத்தடுத்து மூன்று படங்களில் நாயகனாக நடிக்க தயாராகி விட்டாராம். அதில் ஒரு படத்தின் கதை விவாதம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதோடு, விஜயசேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் படத்தை இயக்கியுள்ள சூதுகவ்வும் நலன்குமாரசாமியும் அடுத்து வடிவேலுவை வைத்து ஒரு படம் இயக்குவதாக தகவல் வௌியாகியுள்ளது. காதலும் கடந்து போகும் படம் ரிலீசானதும் வடிவேலு பட வேலைகள் தொடங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.