டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராக அறிமுகமான மின்னலே படத்தில் வசீகரா, இரு விழி உனது -ஆகிய ஹிட் பாடல்கள் மூலம் பிரபலமானவர் பாடலாசிரியர் தாமரை. அதையடுத்து காக்க காக்க, வாரணம் ஆயிரம் என பல படங்கள் பல மெலோடி பாடல்களை எழுதினார். சமீபத்தில்கூட என்னை அறிந்தால் படத்தில் அவர் எழுதிய உனக்கென்ன வேணும் சொல்லு என் பாடல் சூப்பர் ஹிட்டானத. அந்த வகையில், ஏ.ஆர்.ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் அதிகமான பாடல்களை எழுதியிருக்கிறார் தாமரை.
மேலும், சமீபகாலமாக பாடல்களில் மெலோடித்தன்மை குறைந்து கானா பாடல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. ஆனபோதும், தாமரையைப் பொறுத்த வரை தரமான பாடல்களையே எழுதுவது என்பதில் உறுதியாக இருந்து வருகிறார். குறிப்பாக, கொச்சைத்தமிழில் எழுதப்படும் கானா பாடல்களை எழுத அவர் ஒத்துக்கொள்வதே இல்லையாம். தன்னை படத்தின் முழுப்பாடல்களை எழுத சொல்லும் டைரக்டர்களிடம்கூட, கானா பாடல்கள் இருக்கும்பட்சத்தில் அதை வேறு பாடலாசிரியர்களை வைத்து எழுதிக்கொள்ளுங்கள் என்று விட்டுக்கொடுத்து விடுகிறராம் தாமரை.