பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாதவன் நடிப்பில் இன்று திரைக்கு வந்துள்ள படம் இறுதிச்சுற்று. துரோகி பட சுதா இயக்கியுள்ள இந்த படத்தில் நிஜ பாக்சிங் வீராங்கனை ரித்திகாசிங் நாயகியாக நடித்துள்ளார். தமிழ், இந்தி என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்திற்கான விளம்பரங்கள் கடந்த ஒரு வாரமாகவே பரபரப்பாக செய்யப்பட்டு வருகிறது.
அதோடு, இப்படத்தின் நாயகனாக மாதவன் ஆடியோ வெளியீட்டு விழாவில் இருந்தே இப்படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் இறங்கியிருந்தார். அந்த வகையில், கடந்த ஒரு வாரமாக சென்னையில் முகாமிட்டு பல சேனல்களில் இறுதிச்சுற்று படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், நேற்றைய தினம் இறுதிச்சுற்று படத்தின் பத்திரிகையாளர் காட்சி திரையிட்டபோது படயூனிட்டுடன் மாதவனும் வந்திருந்தார்.
அப்போது அவரால் சகஜமாக பேசமுடியவில்லை. அதுபற்றி அவர் கூறுகையில், இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக கடந்த 3 நாட்களாக இடைவிடாத பேட்டிகளில் ஈடுபட்டிருந்தேன். அதற்காக பேசிப்பேசி என் வாயே வலித்து விட்டது என்று கரகர குரலில் பேசினார் மாதவன்.